24 மணி நேரத்தில் கொரானாவுக்கு 4 பேர் பலி, 391 பேர் பாதிப்பு! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் உயர்வடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தினசரி எண்ணிக்கை மெதுவாக அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 391 புதிய நோயாளிகள் பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,755 ஆக உயர்ந்துள்ளது.

இதேகாலத்தில், தமிழ்நாடு, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளதால், மொத்தமாக 4 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் மட்டும் 194 பேர் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 27 பேர் சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாநில சுகாதாரத்துறை கண்காணிப்பை தீவிரமாக்கி வருகிறது.

மத்திய அரசு மற்றும் மாநிலங்கள், பொதுமக்கள் தொடர்ந்து முககவசம் அணிந்து, தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தியுள்ளன.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Corona update india 07 may 2025


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->