மீண்டும் கொரோனா தொற்று? இந்தியாவில் 257 பேர் சிகிச்சை பெறும் நிலை – தொற்று வராமல் தற்காத்து கொள்வது எப்படி?
Corona infection again 257 people are undergoing treatment in India how to protect yourself from infection
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆயிரக்கணக்கான உயிர்கள் இழந்தன, நாடுகள் முடங்கின. தடுப்பூசி வந்த பிறகு, உலகம் பழைய நிலையிற்குத் திரும்பத் தொடங்கியது. ஆனால் தற்போது, மீண்டும் சில நாடுகளில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ளது என்ற தகவல் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவிலும் கொரோனா பாதிப்புகள் மீண்டும் எழுச்சி பெற்று வருகின்றன. இதனை உறுதி செய்யும் வகையில், தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் 257 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருவதாக ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
எப்படி பரவுகிறது இந்த வைரஸ்?
கொரோனா வைரஸ் முக்கியமாக காற்றின் மூலமும், தொற்றுற்ற நபர்களின் நெருக்கமான தொடர்புகளும் மூலமாக பரவுகிறது. அவர்கள் பயன்படுத்திய துணிகள், கைப்பிடிகள், பொருள்கள் மற்றும் பரஸ்பர தொடுதல் போன்றவற்றின் மூலமாகவும் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. முகக்கவசம் இல்லாமல், சுத்தமில்லாமல் செயல்படுவது முக்கியமான ஆபத்து காரணிகளாகும்.
அறிகுறிகள் எவை?
கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் பல்வேறு அறிகுறிகளை வெளிப்படுத்தலாம்:
இந்த அறிகுறிகள் வைரஸ் தாக்கிய 2 முதல் 14 நாட்களுக்குப் பிறகு தோன்றலாம். குறிப்பாக, மூச்சுவிட சிரமமாக இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம்.
தடுக்க என்ன செய்யலாம்?
தடுப்பூசி செலுத்துவதே முதன்மையான பாதுகாப்பு. 6 மாதங்கள் மற்றும் அதற்கு மேற்பட்டோர் கட்டாயமாக தடுப்பூசி போட வேண்டும்.
அத்துடன், சில எளிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
-
முகக்கவசம் அணிந்து வெளியில் செல்லவும்
-
20 வினாடிகள் சோப்பால் கைகளை கழுவவும்
-
அல்லது 60% ஆல்கஹால் கொண்ட சானிடைசர் பயன்படுத்தவும்
-
அதிகமடியாக தொடப்படும் மேற்பரப்புகளை சுத்தம் செய்யவும்
-
வெளியே இருந்து வந்தவுடன் உடைகளை கழற்றி குளிக்கவும்
-
நோய் அறிகுறி உள்ளவர்களிடம் இருந்து தூரம் கடைபிடிக்கவும்
மீண்டும் ஆபத்து வரும் நிலை உள்ளதா?
அதிக அலரத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லையென்றாலும், மக்கள் மீண்டும் கவனமாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த வருடங்களில் நாம் அடைந்த அனுபவங்களால், நம்மிடம் தயாரான சுகாதாரத்திட்டங்கள், மருத்துவ வசதிகள் உள்ளன. அதே நேரத்தில், ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் பொறுப்போடு நடந்து கொள்வதே தற்போது மிக முக்கியம்.
கொரோனாவின் பரவல் மீண்டும் வரக்கூடிய நிலையை நாம் நிராகரிக்க முடியாது. ஆனால் இதற்கான தடுப்பு வழிகள் நம்மிடம் இருக்கின்றன. தடுப்பூசி, சுத்தம், சமூக இடைவெளி மற்றும் விழிப்புணர்வே நம்மை பாதுகாக்கும்.
அதனால்தான், "எச்சரிக்கையாக இருக்கலாம் – பயப்பட தேவையில்லை!" என்பதே நம் தாரக மந்திரமாக இருக்க வேண்டும்.
English Summary
Corona infection again 257 people are undergoing treatment in India how to protect yourself from infection