பெற்றோர்கள் சொத்தில் பிள்ளைகளுக்கு உரிமை இல்லை.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!
Children have no right to parental property
மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற வழக்கு ஒன்றில் பெற்றோர்கள் சொத்தை பிள்ளைகள் உரிமை கோர முடியாது என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர் பாசில் கான். இவருக்கு சோனியா என்ற மனைவியும், ஆசிஃப் கான் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் பாசில் கான் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையில் உள்ளார். இதனால் அவரது சொத்துக்களை நிர்வகிக்க உரிமை கோரி நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளார் அவரது மனைவி சோனியா.
இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சொத்தில் தனது பங்கை அளிக்க வேண்டும் ஆசிஃப் கான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம் பெற்றோர்கள் உயிரோடு இருக்கும்போது அவர்களது சொத்தை வாரிசுகள் உரிமை கோர முடியாது எனக் கூறி சொத்தை நிர்வகிக்கும் பொறுப்பை சோனியாவிற்கு அளித்துள்ளனர்.
English Summary
Children have no right to parental property