கணவனுடன் தகராறு.. 5 குழந்தைகளுடன் இரயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை..!
Chhattisgarh 5 Daughters with mother Suicide Railway Track 10 June 2021
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்புர் பேம்சா (Bemcha) மாவட்டத்தை சார்ந்த பெண்மணி உமா சாஹு (வயது 45). இவர் சம்பவத்தன்று தனது ஐந்து பெண் குழந்தைகளான அன்னபூர்ணா (18), யசோதா (16), பூமிகா (14), கும்கம் (12), துளசி (10) ஆகியோருடன் அங்குள்ள இரயில் தண்டவாள பகுதிக்கு சென்றுள்ளார்.
இரயில் வரும் நேரத்தில் திடீரென யாரும் எதிர்பாராத வகையில் பிள்ளைகளுடன் இரயில் முன் விழுந்து தற்கொலை செய்துள்ளார். 5 பிள்ளைகளுடன் தாய் இரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை அப்பகுதியில் ஏற்படுத்தியது.
மேலும், இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்து ஆறு பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்கையில், கணவருடன் முன்தினம் இரவு ஏற்பட்ட தகராறு காரணமாக உமா தனது 5 பெண் குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்டது அம்பலமானது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Chhattisgarh 5 Daughters with mother Suicide Railway Track 10 June 2021