சென்னை வண்ணாரப்பேட்டையில் பகீர் சம்பவம்; ரூ.10 ஆயிரம் கூலி பாக்கி தகராறு; கொத்தனாரை அடித்து கொலை செய்துள்ள மேஸ்திரி..!
A mason in Washermanpet beat and killed a bricklayer over a dispute over wages of Rs 10 000
சென்னை வண்ணாரப்பேட்டை நல்லப்ப வாத்தியார் தெருவில் வெங்கடாசலம் என்பவருக்கு சொந்தமான இடத்தில் புதிய வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணியில் பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 46 வயதான கோட்டீஸ்வரன் என்பவர் மேஸ்திரியாக பணியாற்றி வந்தார். அவருடன், கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகரை சேர்ந்த 55 வயதான ஜெயக்கொடி என்பவரும் கொத்தனாராக வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், கொத்தனார் ஜெயக்கொடிக்கு கோட்டீஸ்வரன் ரூ.10 ஆயிரம் கூலி பாக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அதை கேட்பதற்காக ஜெயக்கொடி, சம்பவத்தினமான நேற்று கட்டிட வேலை நடைபெறும் இடத்துக்கு சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியுள்ளது.

இதன் போது ஆத்திரமடைந்த மேஸ்திரி கோட்டீஸ்வரன், அங்கிருந்த ரீப்பர் கட்டையால் ஜெயக்கொடியை தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ஜெயக்கொடி மயங்கி விழுந்துள்ளார்.
உடனடியாக அவருடன் வேலை பார்த்த தட்சிணாமூர்த்தி என்பவர் ஜெயக்கொடியை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ஜெயக்கொடி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்த இறப்பு குறித்து மருத்துவமனையில் இருந்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, சம்பவ இடத்திற்கு சென்ற போலியாஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதலில் கட்டிட வேலையின்போது மேலே இருந்து தவறி விழுந்து ஜெயக்கொடி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
போலீசாரின் விசாரணையில், ஜெயக்கொடி கூலி பாக்கியை கேட்கச் சென்றபோது ஏற்பட்ட தகராறில் கோட்டீஸ்வரன் ரீப்பர் கட்டையால் தாக்கியதும், இதில் ஜெயக்கொடி மயங்கி விழுந்து உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து கோட்டீஸ்வரனை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் வண்ணாரப்பேட்டை பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
A mason in Washermanpet beat and killed a bricklayer over a dispute over wages of Rs 10 000