கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் அந்தமான் முன்னாள் தலைமை செயலாளர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்.! - Seithipunal
Seithipunal


அந்தமான் நிகோபார் தீவுகளின் தலைமை செயலாளராக இருந்த ஜிதேந்திர நரைன் என்பவர், 21 வயதுடைய இளம்பெண் ஒருவரிடம் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி தலைமை செயலாளர் பங்களாவிற்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு வைத்து அந்த பெண்ணை, ஜிதேந்திர நரைன் தனது நண்பர்களான தொழிலதிபர் சந்தீப் சிங் என்ற ரிங்கு, முள்ளாள் தொழிலாளர் துறை இயக்குனர் ரிஷிஷ்வர்லால் ரிஷி உள்ளிட்டோருடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண், சம்பவம் தொடர்பாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1-ம் தேதி போலீசில் புகார் அளித்தார். அப்போது, ஜிதேந்திர நரைன், டெல்லி நிதித்துறையின் தலைவராக பணியாற்றி வந்ததால், கடந்த அக்டோபர் மாதம் 17-ம் தேதி அவரை பணியில் இருந்து இடைநீக்கம் செய்து மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

இதை தொடர்ந்து, கூட்டு பாலியல் சம்பவத்தில் ஈடுபட்ட ஜிதேந்திர நரைன் உள்பட மூன்று பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைத்தனர். இந்த கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வந்தது. 

இந்த நிலையில், ஜிதேந்திர நரைன் உள்பட மூன்று பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், மூன்று பேர் மீதும் நீதிமன்றத்தில் விரைவில் வழக்கு விசாரணை நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

charge sheet filed to ex secretary in andhaman for sexual harassment case


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->