இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க வாய்ப்பு.. மத்திய அமைச்சர் தகவல்.!
central minister says about petrol price hike
இந்தியாவில் கடந்த 128 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 101.40-க்கு, டீசல் விலை ரூ. 91.43-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதனிடையே உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததையடுத்து அந்நாட்டின் மீது பல்வேறு உலக நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளது. உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி நாடான ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத்தடை காரணமாக, கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
தற்போது கச்சா எண்ணெய் பீப்பாய் 139 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஒரு நாள் ஒன்றுக்கு 35 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் தேவைப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும் என்றும், ஐந்து மாநில தேர்தல் பிறகு இந்த உயர்வு இருக்கலாம் என தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கராத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, உக்ரைன் - ரஷ்யா போரால் மாறிவரும் சர்வதேச சூழ்நிலையை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், விலை உயர்வு குறித்து பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
English Summary
central minister says about petrol price hike