ஈரான் உடனாட இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு உதவ தயார்: மத்திய அரசு அறிவிப்பு..!
Central government announces readiness to help Israel reach ceasefire with Iran
இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் இடையே கடந்த 12 நாட்களுக்கு மேலாக நீடித்த போரை நிறுத்த ஒப்புக்கொண்ட நிலையில், இதனையடுத்து மத்திய கிழக்கு நாடுகள் தங்களது வான்பரப்பை மீண்டும் திறந்து விட்டுள்ளன. ஒப்பந்தத்தை மீறி ஈரான் மீதான தாக்குதல் தொடர்கிறதாக ட்ரம்ப் அறிவித்து இருந்தார்.
இந்நிலையில், இஸ்ரேல்- ஈரான் போர் நிறுத்த முயற்சிக்கு இந்தியா உதவ தயாராக உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேற்கு ஆசியாவில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

மேற்கு ஆசியாவின் சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் தொடர்பான முன்னேற்றங்களை நாங்கள் கண்காணித்து வருகிறோம் என்றும், ஒட்டுமொத்த மற்றும் நிலையான பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கான வாய்ப்புகள் குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலையுடன் இருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர்நிறுத்தம் மற்றும் அதைக் கொண்டு வருவதில் அமெரிக்கா மற்றும் கத்தார் வகித்த பங்கு பற்றிய அறிவிப்புகளை நாங்கள் வரவேற்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பிராந்தியத்தில் உள்ள பல மோதல்களைத் தீர்த்துத் தீர்ப்பதற்கு அமைதி பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்திற்கு மாற்றாக வேறு எதுவும் இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம் என்று குறிப்பிட்டுள்ள அவர், இந்த முயற்சிகளில் இந்தியா தனது பங்கை வகிக்கத் தயாராக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் நிலையான அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நோக்கிச் செயல்படுவார்கள் என்று நம்புவதாக ரந்திர் ஜெய்ஸ்வால் அவருடைய அறிக்கையில் கூறியுள்ளார்.
English Summary
Central government announces readiness to help Israel reach ceasefire with Iran