#மத்திய பிரதேசம் || வேகமாக வந்த கார் இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்து.! 4 பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசத்தில் வேகமாக வந்த கார் இருசக்கர வாகனங்கள் மீது மோதிய விபத்தில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள தான்சென் சாலையில் வேகமாக வந்த கார், இருசக்கர வாகனங்களில் சென்று கொண்டிருந்த 4 பேர் மீது மோதி விட்டு, நிற்காமல் அதிவேகத்தில் சென்று உள்ளது.

இந்த விபத்தில் நான்கு பேரும் படுகாயம் அடைந்தநிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் சாலையில் இருந்த கண்காணிப்பு சிசிடிவி கேமராவின் மூலம் கார் எண் கண்டுபிடிக்கப்பட்டு, கார் ஓட்டியவரை அடையாளம் கண்டுபிடித்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Car bike accident in madhyapradesh Gwalior


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->