காதலித்த பெண்ணின் தந்தையை பழிவாங்க வீட்டிற்குள் பாம்பை விட்ட  இளைஞர் கைது.! - Seithipunal
Seithipunal


கேரளாவில் பெண்ணை கிண்டல் செய்ததை தட்டி கேட்ட தந்தையை பாம்பை கடிக்க விட்டு கொலை முயற்சி செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகளுக்கு அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் காதலிக்க கூறி தொல்லை செய்து வந்துள்ளார். இது மாணவியை தனது தந்தையுடன் தெரிவித்ததை அடுத்து அவர் அந்த இளைஞரை கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் ராஜேந்திரனை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி ராஜேந்திரனை கொலை செய்வதற்காக அவரது வீட்டிற்குள் ஜன்னல் வழியாக விஷப் பாம்பை வீசியுள்ளார். அதிகாலையில் ஏதோ சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் பார்த்தபோது பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அந்த விஷப் பாம்பை அடித்து கொன்றனர்.

 அதன் பின்னர் வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தபோது இளைஞர் தனது இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து உடனடியாக ராஜேந்திரன் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் இளைஞரை கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Boy snake to lovers father house in Kerala


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->