விநாயகர் ஊர்வலத்தின் போது சோகம் - பட்டாசு வெடித்து சிறுவன் பலி.!! - Seithipunal
Seithipunal


விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வத்தின் போது, பட்டாசுகள் வெடித்ததில் 10 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 27-ம் தேதி புதன் கிழமை நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக நடைபெற்றது. இதை தொடர்ந்து பல இடங்களில் விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்று மாலை கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் நடைபெற்றது. 

இந்த ஊர்வத்தின் போது, பட்டாசுகள் வெடித்ததில் 10 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் உயிரிழந்தார், மேலும் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் உட்பட 6 பேர் காயமடைந்தனர். விநாயகர் சிலை ஏற்றிச் சென்ற வாகனம் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இயக்கத்தில் இருந்தது. இதனால் வெப்பம் அதிகரித்து பட்டாசு நிரப்பப்பட்ட பெட்டி தீ பிடித்து எரிந்து வெடித்து விபத்து ஏற்பட்டது. 

இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர். அதில் ஒரு மாணவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

boy died for firecrackers blast vinayagar chathurthi function in bengalur


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->