ஆமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி: இந்தியாவிலேயே ஆய்வு செய்யப்படும்: சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் தகவல்..!
Black box of Air India flight that crashed in Ahmedabad will be examined in India says Civil Aviation Minister
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் ஏர் இந்திய விமான விபத்து நாட்டை உலுக்கியுள்ள நிலையில், விமான விபத்துகள் விசாரணை ஆணையத்திலேயே, விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்பு பெட்டி ஆய்வு செய்யப்படும் என மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
'ஏர் இந்தியா' விமானம் விழுந்து நொறுங்கியதற்கான காரணத்தை அறிய, பைலட் அறையில் இருக்கும் கருப்புப் பெட்டியை தேடும் பணியை, ஏ.ஏ.ஐ.பி., எனப்படும், விமான விபத்து விசாரணை முகமை மேற்கொண்டது. கருப்புப் பெட்டியில் விமானியின் குரல் உட்பட அனைத்து தரவுகளும் பதிவு செய்யப்படும்.

விபத்து நேரும் போது, அது குறித்த விபரங்களை விமானி அதில் பதிவு செய்வார். இதன் வாயிலாக விபத்துக்கான காரணங்களை கண்டறிய முடியும். ஏர் இந்தியா விமானம் பி.ஜே., மருத்துவக் கல்லுாரி விடுதி கட்டடத்தின் மேற்கூரையில், கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டது. ஆனால், இந்த கருப்புப் பெட்டி ஆய்வு செய்ய வெளிநாட்டிற்கு அனுப்பி ஆய்வு செய்யப்படவுள்ளதாக தகவல் பரவியது.
இது குறித்து, மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறியதாவது: கருப்பு பெட்டி வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டதாக வெளியான தகவல்கள் வெறும் வதந்திகளே என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், விமான விபத்துகள் விசாரணை ஆணையத்திலேயே, விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்பு பெட்டி ஆய்வு செய்யப்படும் என்றும், விசாரணை இந்திய அதிகார வரம்பிற்குள் உறுதியாகவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கருப்புப் பெட்டி தரவுகளை மீட்பது மிகவும் தொழில்நுட்ப ரீதியான விஷயம் எனவும், ஏ.ஏ.ஐ.பி., எனப்படும், விமான விபத்து விசாரணை முகமை ஆய்வு மற்றும் விசாரணை நடத்தி முடித்த பிறகு, விபத்திற்கான காரணம் தெரியவரும் என்று அவர் மேலும் குறிப்ப்பிட்டுள்ளார்.
English Summary
Black box of Air India flight that crashed in Ahmedabad will be examined in India says Civil Aviation Minister