105 பாஜக நிர்வாகிகள் மர்ம மரணம்.! மேற்கு வங்கத்தில் அடுத்தடுத்து விழும் மர்ம சாவு.! - Seithipunal
Seithipunal


மேற்குவங்கத்தில் பாஜக எம்எல்ஏ தற்கொலை செய்து கொண்டதாக, கூறப்படும் நிலையில், அவருடைய மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து பாஜக சார்பில் மனு அளிக்கப்பட்டது. 

மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக எம்எல்ஏவின் உடலானது ஒரு செல்போன் கடையில் தூக்கில் தொங்கியது.

மம்தா பானர்ஜியின் ஆட்சியில் பாஜக எம்எல்ஏ கொலை செய்யப்பட்டார், என்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால், மேற்கு வங்கத்தின் வட மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டத்திற்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. 

இந்தநிலையில், பாஜகவைச் சேர்ந்த 105 நிர்வாகிகள் மர்மமான முறையில் இருந்துள்ளதாகவும், எனவே, இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் இன்று பாஜக சார்பில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து மனு அளிக்கப்பட்டது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bjp MLA Death case investigation


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->