105 பாஜக நிர்வாகிகள் மர்ம மரணம்.! மேற்கு வங்கத்தில் அடுத்தடுத்து விழும் மர்ம சாவு.!
Bjp MLA Death case investigation
மேற்குவங்கத்தில் பாஜக எம்எல்ஏ தற்கொலை செய்து கொண்டதாக, கூறப்படும் நிலையில், அவருடைய மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து பாஜக சார்பில் மனு அளிக்கப்பட்டது.
மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக எம்எல்ஏவின் உடலானது ஒரு செல்போன் கடையில் தூக்கில் தொங்கியது.
மம்தா பானர்ஜியின் ஆட்சியில் பாஜக எம்எல்ஏ கொலை செய்யப்பட்டார், என்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால், மேற்கு வங்கத்தின் வட மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டத்திற்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது.
இந்தநிலையில், பாஜகவைச் சேர்ந்த 105 நிர்வாகிகள் மர்மமான முறையில் இருந்துள்ளதாகவும், எனவே, இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் இன்று பாஜக சார்பில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து மனு அளிக்கப்பட்டது.
English Summary
Bjp MLA Death case investigation