மனிதநேயம்: பிச்சை எடுத்த பெண்ணை மணந்த இளைஞர்!!
Bihar Beggar Girl Marriage Youth
பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தைச் சேர்ந்த கோலு யாதவ் என்ற இளைஞரின் மனிதநேயச் செயல் தற்போது சமூக வலைதளங்களில் பலரின் பாராட்டைப் பெற்று வருகிறது. அண்மையில் ரயிலில் பயணித்தபோது, அதே பெட்டியில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஒரு இளம்பெண் மீது சில பயணிகள் தவறான நோக்குடன் பேசி, அவரைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியதைக் கோலு யாதவ் கண்டார்.
உடனடியாக அந்தப் பெண்ணுக்குப் பாதுகாப்புக் கரம் நீட்டிய கோலு, அவரது பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்குடன், பக்சரில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
வீடு திரும்பியதும், அந்தப் பெண்ணின் பரிதாபமான நிலை, அவர் அனாதையாக விடப்பட்ட பின்னணி மற்றும் அவர் சந்தித்த இன்னல்கள் குறித்துத் தனது பெற்றோரிடம் கோலு யாதவ் விளக்கினார். மகனின் மனிதநேயச் செயலைக் கண்டு நெகிழ்ந்த பெற்றோர்கள், அந்தப் பெண்ணுக்குத் தங்கள் வீட்டில் அடைக்கலம் கொடுக்கச் சம்மதித்தனர்.
நாட்கள் செல்லச் செல்ல, அந்தப் பெண்ணின் நிலைமையைப் பூரணமாகப் புரிந்துகொண்ட கோலு யாதவ், தனது பெற்றோரின் முழுச் சம்மதத்துடன் அவரைத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தார்.
மனிதநேயத்தின் வெளிப்பாடாக மகிழ்ச்சியுடன் திருமணம் செய்துகொண்ட இந்தத் தம்பதியின் திருமணப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. சுயநலமின்றிச் செயல்பட்ட கோலு யாதவையும், அவரது இந்த முடிவுக்கு முழு மனதுடன் ஆதரவளித்த அவரது பெற்றோர்களையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.
English Summary
Bihar Beggar Girl Marriage Youth