பெங்களூரில் சோகம்! பள்ளி பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்ட மாணவன்! விசாரணையில் அம்பலமான உண்மை! - Seithipunal
Seithipunal


பள்ளிப்பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்ட 2-ஆம் வகுப்பு மாணவன் பின்பக்க சக்கரம் ஏறியதில் பலி!

பெங்களூருவில் பள்ளிப் பேருந்தில் ஏற்பட்ட தவறால், 7 வயது சிறுவன் சோகமிகு விபத்தில் உயிரிழந்தது அப்பகுதியை உலுக்கியுள்ளது.

ஜனதா காலனியில் வசிக்கும் இரண்டாம் வகுப்பு மாணவன் எல். ராஜத், கடந்த 18 ஆம் தேதி பள்ளி முடிந்து வீடு திரும்பும் வழியில், பேருந்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.

ராஜத் மற்றும் அவரது சகோதரி, பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, கதவு சரியாக மூடப்படாமல் இருந்தது.

பேருந்தை ஓட்டிய விநோத் (வயது 35), வேகமாக வாகனத்தை ஓட்டியதாக கூறப்படுகிறது. குழந்தைகளை கவனிக்க பொறுப்பில் இருந்த பெண் பணியாளர், ராஜத் வீழ்ந்த இடத்திற்கு முன்பே இறங்கி விட்டதாகவும் தெரிகிறது.

மேலும் விசாரணையில், படிக்கட்டு அருகே அமர்ந்திருந்த ராஜத்திடம், கதவை இழுத்து மூடுமாறு ஓட்டுநர் கூறியுள்ளார். கதவிற்கு சென்ற ராஜத், வேகத்தால் நிலை தடுமாறி பேருந்திலிருந்து கீழே விழுந்தார். பின்னால் வந்த சக்கரம் மீது ஏறி இறங்க, அவர் உயிரிழந்தார்.

அப்பகுதி மக்கள் ராஜத்தை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றாலும், மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து விநோத் கைது செய்யப்பட்டு, அவரது மீது பிணையில் வெளியே வர முடியாத வகையில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

bangalore school student death in van


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->