வெளியே 10 பேர் பலி! உள்ளே RCB வீரர்களுடன் CM சித்தராமையா கொண்டாட்டம்! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் 18வது சீசனின் இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன்னில் வீழ்த்தி, ஆர்சிபி தனது வரலாற்றிலேயே முதன்முறையாக கோப்பையை கைப்பற்றியது. 

இதன் வெற்றி விழாவை முன்னிட்டு, பெங்களூருவில் திறந்தவெளி பஸ்சில் வீரர்கள் பேரணி விதான சவுதாவில் தொடங்கி, சின்னசாமி ஸ்டேடியத்தில் முடிந்தது.

தொடர்ந்து மாலை 6 மணிக்கு பாராட்டு விழாவுக்காக, சின்னசாமி மைதானத்தை சுற்றி ரசிகர்கள் நேரத்துக்கு முந்தியே திரண்டனர். 

ஆர்சிபி வீரர்கள் வருவதற்குள் ரசிகர்கள் வேலிகள், சுவர்களில் ஏறியதால் பரபரப்பு நிலவியது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட நெரிசலில் 10 பேர் உயிரிழந்தனர். இதில் ஒரு சிறுமி, 4 பெண்கள் உட்பட 10 பேர் பலியாகினர். 20 பேருக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். 

இதற்கிடையே மைதானத்திற்கு உள்ளே முதல்வர் சித்தராமையா உடன் RCB அணி வீரர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

bangalore RCB Calibration accident


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->