வெளியே 10 பேர் பலி! உள்ளே RCB வீரர்களுடன் CM சித்தராமையா கொண்டாட்டம்!
bangalore RCB Calibration accident
ஐபிஎல் 18வது சீசனின் இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன்னில் வீழ்த்தி, ஆர்சிபி தனது வரலாற்றிலேயே முதன்முறையாக கோப்பையை கைப்பற்றியது.
இதன் வெற்றி விழாவை முன்னிட்டு, பெங்களூருவில் திறந்தவெளி பஸ்சில் வீரர்கள் பேரணி விதான சவுதாவில் தொடங்கி, சின்னசாமி ஸ்டேடியத்தில் முடிந்தது.
தொடர்ந்து மாலை 6 மணிக்கு பாராட்டு விழாவுக்காக, சின்னசாமி மைதானத்தை சுற்றி ரசிகர்கள் நேரத்துக்கு முந்தியே திரண்டனர்.
ஆர்சிபி வீரர்கள் வருவதற்குள் ரசிகர்கள் வேலிகள், சுவர்களில் ஏறியதால் பரபரப்பு நிலவியது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட நெரிசலில் 10 பேர் உயிரிழந்தனர். இதில் ஒரு சிறுமி, 4 பெண்கள் உட்பட 10 பேர் பலியாகினர். 20 பேருக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதற்கிடையே மைதானத்திற்கு உள்ளே முதல்வர் சித்தராமையா உடன் RCB அணி வீரர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
bangalore RCB Calibration accident