மகாராஷ்டிராவில் ஆட்டோ மீது டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து - 4 பேர் பலி - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்டோ மீது டிப்பர் லாரி கவிழ்ந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் ராய்கரில் 4 மாணவர்கள் தேர்வு எழுதிவிட்டு நேற்று இரவு ஆட்டோவில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்பொழுது சோலே பகுதி அருகே வேகமாக வந்த டிப்பர் லாரி கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் மற்றும் 3 மாணவர்கள் என மொத்தம் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இந்த விபத்து குறித்த தகவல் அறிந்து வந்த போலீசார் இடிபாடுகளில் சிக்கியிருந்த உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே 5 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளதாக ராய்கர் மாவட்டத்தின் பாதுகாப்பு அமைச்சரும், தொழில்துறை அமைச்சருமான உதய் சமந்த் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Auto tipper lorry accident in Maharashtra


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->