கண்டதும் சுட்டு தள்ளுங்க - முதலமைச்சர் அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, துப்ரியில் சமீபத்திய மதவெடிப்பு சூழ்நிலையைத் தொடர்ந்து இரவு நேரத்தில் “கண்டதும் சுடும்” உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

வங்கதேச எல்லை அருகே உள்ள இம்மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகைக்குப் பிறகு ஹனுமான் கோவில் அருகே மாட்டுத்தலை கண்டெடுக்கப்பட்ட சம்பவம், பின்னர் நிகழ்ந்த கல் வீச்சு உள்ளிட்ட மதஅமிலங்களைத் தடுக்க இந்த கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

“மாலை 6க்குப் பிறகு வன்முறையில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் சுடப்படுவார்கள்” என அவர் எச்சரித்தார். சட்ட ஒழுங்கை நிலைநிறுத்த விரைவு அதிரடிப்படை மற்றும் CRPF அணிகள் தயார் நிலையில் உள்ளன. மாட்டு இறைச்சி கடத்தல் மற்றும் வங்கதேச சக்திகளின் தூண்டுதல்தான் பதற்றத்திற்குக் காரணம் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

மேலும், பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி பாதுகாப்பில் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Assam Himanta Biswa Sarma Shoot and sight order


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->