பேருந்தில் பிறந்த பெண் குழந்தைகள்... அதிரடி சலுகை அறிவித்த தெலுங்கானா அரசு..!
Announced free bus travel for baby girls born on the bus
ஓடும் பேருந்தில் பிறந்த இரு குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பயணம் அறிவிக்கப்படுள்ளது.
தெலுங்கானாவில் பேருந்தில் பிறந்த இரு பெண் குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பயணத்தை அறிவித்துள்ளது அம்மாநில அரசு. தெலுங்கானாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சிக்கும் பல திட்டங்கள் செயல்படுத்தி வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் உள்ள பெத்தபள்ளி கிராமத்திலும், ஆசிபாபாத் பகுதியிலும் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் தாய்மார்களுக்கு பிரசவ வலி ஏற்படவே அவர்களுக்கு பொதுமக்களே பிரசவம் பார்த்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த நிலையில், ஓடும் பேருந்தில் பிறந்த இரு பெண் குழந்தைகளுக்கும் வாழ்நாள் முழுவதும் இலவச பயணம் மேற்கொள்ளும் சலுகை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது. மேலும், தாய் சேய்கள் நலமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
English Summary
Announced free bus travel for baby girls born on the bus