"அதிகக் குழந்தைகளைப் பெற்றெடுங்கள்!" ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் அதிரடிச் சலுகைகள்!
Andhra New Population Policy Incentives Free IVF and Long Leaves
ஆந்திரப் பிரதேசத்தில் பிறப்பு விகிதம் (1.5) சரிந்து வருவதைச் சரிசெய்து, அதை 2.1 ஆக உயர்த்தும் நோக்கில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு 'புதிய மக்கள் தொகை மேலாண்மைக் கொள்கை' வரைவுத் திட்டத்தைச் சட்டப்பேரவையில் வெளியிட்டுள்ளார்.
தம்பதிகளுக்கான மெகா சலுகைகள்:
பணமுடிப்பு: இரண்டாவது மற்றும் மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிகளுக்கு ₹25,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.
3-வது குழந்தைக்குச் சிறப்புப் பாதுகாப்பு: மூன்றாவது குழந்தைக்கு 5 வயது வரை மாதம் ₹1,000 ஊட்டச்சத்து உதவித்தொகையும், 18 வயது வரை இலவசக் கல்வியும் வழங்கப்படும்.
பெற்றோர் விடுமுறை: குழந்தைப் பேறுக்காகத் தாய்க்கு 12 மாதங்கள் (1 ஆண்டு) மற்றும் தந்தைக்கு 2 மாதங்கள் விடுமுறை அளிக்கப்படும்.
இலவச IVF சிகிச்சை: குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் பிபிபி (PPP) முறையில் அதிநவீன 'ஐவிஎஃப்' சிகிச்சை இலவசமாக வழங்கப்படும்.
அடுத்த கட்டம்:
இந்தத் திட்டம் குறித்து ஒரு மாதம் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும். வரும் மார்ச் இறுதிக்குள் கொள்கை இறுதி செய்யப்பட்டு, ஏப்ரல் 1 முதல் மாநிலம் முழுவதும் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
> பார்வை: தென்னிந்தியாவில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தடுத்து, இளைஞர்களின் பங்களிப்பை உறுதி செய்யவே இந்த அதிரடி மாற்றங்களை ஆந்திர அரசு முன்னெடுத்துள்ளது.
English Summary
Andhra New Population Policy Incentives Free IVF and Long Leaves