' டில்லி குண்டுவெடிப்பு குற்றவாளிகள் நரகத்தில் இருந்தாலும் வேட்டையாடப்படுவார்கள்': அமித்ஷா உறுதி..! - Seithipunal
Seithipunal


 ஹரியானாவின் பரீதாபாத் நகரில் வடக்கு மண்டல கவுன்சிலின் 32-வது கூட்டம் இன்று (நவம்பர் 17) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்றது. வடக்கு மண்டல கவுன்சில் ஆனது ஹரியானா, ஹிமாசலபிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், டில்லி, ஜம்மு-காஷ்மீர், லடாக் மற்றும் சண்டிகர் ஆகிய மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கியது. இந்த கூட்டத்தில் மத்திய அரசு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமித்ஷா பேசும் போது கூறியதாவது: பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், பயங்கரவாதத்தை அதன் வேர்களிலிருந்து ஒழிப்பதில் அரசு உறுதியாகவுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், டில்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில், குற்றவாளிகள் அடையாளம் காணப்படுவார்களுக்கு மிகக் கடுமையான தண்டனையை எதிர்கொள்ள அவர்கள் நீதித்துறையின் முன் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று உறுதியளித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அமித்ஷா, போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் குற்ற வழக்குகளில் விரைவான விசாரணை அவசியமாகும் என்றும், பெண்கள் மற்றும் சிறார்களை குறிவைத்து நடத்தப்படும் கொடூரமான குற்றங்களை எந்த நாகரிக சமூகமும் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளார். மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு அரசின் முதன்மையான முன்னுரிமையாகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் விசாரணைகளை விரைவுபடுத்தவும், சரியான நேரத்தில் நீதி வழங்கவும் விரைவு சிறப்பு நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் அமித்ஷா வலியுறுத்தியுள்ளார். அத்துடன், டில்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றவாளிகளை நரகத்தில் இருந்தாலும் அரசு வேட்டையாடும் என்றும், அவர்கள் செய்த குற்றத்திற்கு கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்வோம் என்றும் அவர் சூளுரைத்துள்ளார். 

இன்று நடந்த ஹரியானாவின் பரீதாபாத் நகரில் வடக்கு மண்டல கவுன்சிலின் 32-வது கூட்டத்தின் தொடக்கத்தில், செங்கோட்டை குண்டுவெடிப்பு மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள நவ்காம் போலீஸ் ஸ்டேஷனில் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அவர்களின் நினைவாக இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Amit Shah assures that Delhi blast culprits will be hunted down even in hell


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?


செய்திகள்



Seithipunal
--> -->