இந்தியாவில் ஏலியன்! பிரதமர் மோடி அலுவலகத்திற்கு வந்த மெசேஜ்! பரபரப்பான காவல் துறையினர்! - Seithipunal
Seithipunal


புனே நகரின் கோத்ரூட் பகுதியைச் சேர்ந்த ஒருவர், தன் வீட்டு ஜன்னல் வழியாக ஏலியன்களை பார்க்க பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகத்திற்கு, மின்னஞ்சல் மூலம் செய்தி அனுப்பியுள்ளார். தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

இதையடுத்து, விசாரணை நடத்திய புனே நகரின் சிங்காடு சாலை காவல் நிலைய காவலர், கடந்த சில ஆண்டுகளாக, அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதனால், வீட்டை ஒட்டி இருந்த மரத்தின் நிழலை ஜன்னலில் கண்டு, ஏலியன்களை பார்த்ததாக கூறியதகவவும் தெரிவித்துள்ளார். 

கடந்த ஜனவரி 31-ஆம் தேதியன்று ஏற்பட்ட ப்ளூ ரெட் மூன் எனும் அரிய விண்வெளி நிகழ்வின் போது நிலவின் அருகே எதோ பறப்பது போன்றும், நிலவை அந்த மர்மமான பறக்கும் பொருள் கண்காணிப்பது போன்றும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. அது ஏலியன்கள் அல்லது வேற்றுகிற வாசிகள் என்ற  பீதி மக்கள் மத்தியில் பரவியது. இறுதியில்  அது போலியான வீடியோ என்று தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Alien in India


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->