குழந்தைப்பேறு கிடைக்க உயிருடன் கோழிக்குஞ்சை விழுங்க வேண்டும்! மூடநம்பிக்கையால் ஏற்பட்ட விபரீதம்! - Seithipunal
Seithipunal


சத்தீஷ்கர் மாநிலத்தின் சுர்குஜா மாவட்டத்தில் சிந்த்காலோ கிராமத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 35 வயதான ஆனந்த் யாதவ், குழந்தைப்பேறு இல்லாததற்காக பல பரிகாரங்களை செய்து வந்தார். மூடநம்பிக்கைகளில் அதிக நம்பிக்கை கொண்ட அவரிடம், உள்ளூர் ஜோதிடர் ஒருவர், "குழந்தைப்பேறு கிடைக்க உயிருடன் கோழிக்குஞ்சை விழுங்க வேண்டும்" என்று அறிவுரை கூறியதாக தெரிகிறது.

இதனால் ஆவலுடன், சொல்வதற்காக ஆனந்த் யாதவ் அந்த பரிகாரத்தை செய்தார். உயிரோடு கோழிக்குஞ்சை விழுங்கிய பிறகு, உடனே மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை அம்பிகாபூர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

பிரேதப் பரிசோதனையின் போது, அவரது தொண்டையில் சிக்கியிருந்த அந்த கோழிக்குஞ்சு உயிருடன் இருந்தது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அவரது குடும்பத்தினரையும், கிராமவாசிகளையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மூடநம்பிக்கைகளில் நம்பிக்கை வைத்து ஆனந்த் யாதவ் உயிரிழந்தது, இந்த பிரச்சனையின் தீவிரத்தையும் சிந்தனையையும் எதிரொலிக்கிறது.

இச்சம்பவம், மருத்துவ அறிவியல் மற்றும் விழிப்புணர்வின் அவசியத்தை மீண்டும் உணர்த்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A teenager died in the desire to have a child


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->