விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் சுற்றி திரிந்த ஒடிசா குற்றவாளிகள்; கண்டுபிடித்து கொடுத்த ரோபோ போலீஸ்..! - Seithipunal
Seithipunal


விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் ரயில் பாதுகாப்பு படை போலீசார் நாட்டிலேயே முதல் முறையாக ரோபோ போலீசை அறிமுகப்படுத்தியுள்ளனர். ஏ எஸ் ஐ அர்ஜுன் என பெயரிடப்பட்ட இந்த ரோபோ, ரயில் நிலையத்தில் தீ மற்றும் புகையைக் கண்டறிந்து பயணிகளை எஎச்சரிக்கிறது. 

அத்துடன், ஒவ்வொரு நாளும் ரயில் நிலையத்தில் வருபவர்ககளை புகைப்படங்களை எடுப்பதோடு, சந்தேக நபர்களையும் ரயில் நிலையத்திற்கு அடிக்கடி வருபவர்களையும் அடையாளம் கண்டு அவர்களின் தகவல்களை அதிகாரிகளுக்கு அனுப்புகிறது.

இவ்வாறு விசாகப்பட்டினம் நிலையத்தில் சுற்றித் திரிந்த இரண்டு பழைய குற்றவாளிகளை ரோபோ ஏ.எஸ்.ஐ. அர்ஜுன் கண்டுபிடித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளது.

குறித்த இருவர் மீதும் ஒடிசா மாநிலம் ராயகடா உட்பட பல காவல் நிலையத்தில் வழக்குகள் உள்ள அடப்பா சிவா மற்றும் பங்காரு என்ற தகவலை கண்டதும் ஜிஆர்பி மற்றும் ஆர்பிஎஃப் போலீசார் சோதனைகளை மேற்கொண்டு அவர்களை கைது செய்துள்ளனர். ரோபோவின் செயலை கண்டு அங்கிருந்த போலீசார் மட்டுமின்றி பயணிகளும் ஆச்சரியமடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A robot police officer identified and apprehended the criminals from Odisha who were loitering at Visakhapatnam railway station


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->