டெல்லி : போலீஸ்காரர் போல் நடித்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர் கைது.! - Seithipunal
Seithipunal


டெல்லியில் போலீஸ்காரர் போல் நடித்து 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

டெல்லி சாகர்பூர் பகுதியில் 13 வயது சிறுமியும், அவரது நண்பர்களும் சம்பவத்தன்று உள்ளூர் தேவாலயத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்பொழுது இரவு 8 மணி அளவில் 50 வயதுடைய நபர் ஒருவர், தன்னை போலீஸ் அதிகாரி போல் காட்டிக்கொண்டு சிறுமியையும் அவரது நண்பர்களையும் பூங்காவிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

பின்பு சிறுமியின் நண்பர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு சிறுமையை மட்டும் தனியாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A man who pretended to be a policeman and raped a girl was arrested in Delhi


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->