10 வயது பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்; தலைமை ஆசிரியருக்கு 20 ஆண்டு சிறை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..! - Seithipunal
Seithipunal


பள்ளி மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த தலைமை ஆசிரியருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 04-ஆம் வகுப்பு படித்து வந்த 10 வயது சிறுமி, கடந்த 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி உடல் வலியுடன் வீட்டிற்கு அழுதுகொண்டே வந்துள்ளார். அப்போது இதுகுறித்து பெற்றோர் விசாரித்துள்ளனர். அப்பள்ளியின் தலைமை ஆசிரியரான யஷ்பால் என்பவர், பள்ளியின் புதிய அரங்கைச் சுற்றிக் காட்டுவதாகக் கூறி தன்னை குளியலறைக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இச்சம்பவம் குறித்து வெளியேசொல்லக்கூடாது என மிரட்டியதாகவும் அந்தச் சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார்.இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் குறித்த தலைமை ஆசிரியர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு ஜிந்த் மாவட்ட கூடுதல் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி சந்தர் ஹாஸ் முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் நீதிபதி நேற்று தீர்ப்பை வழங்கியுள்ளார்.

தீர்ப்பின் படி, பள்ளி மாணவிக்கு பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காகத் தலைமை ஆசிரியர் யஷ்பாலுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் அவர் கூடுதல் காலம் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும்’ என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A Haryana court has sentenced a headmaster to 20 years in prison for sexually assaulting a 10 years old schoolgirl


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->