9 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை; நீதி கேட்டு  மக்கள் நள்ளிரவில் போராட்டம்! - Seithipunal
Seithipunal


டெல்லியின் நேரு விஹார் பகுதியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து அப்பகுதி மக்கள்  நள்ளிரவில் போராட்டம்  செய்தனர் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உடனடியாக நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினார்.

தலைநகர்  டெல்லியில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த பொதுமக்கள் கடுமையான கவலை ஏற்பட்டுள்ளது. தலைநகர்  டெல்லியில் சிறுமி ஒருவர் அருகில் உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்று 2 மணி நேரமாக திரும்பாததால் பெற்றோர் அவளை தேடத் தொடங்கினர்.அப்போது சிறுமியை பார்த்த சிலர்   200 மீட்டர் தள்ளியுள்ள பக்கத்து வீட்டில் சிறுமி நுழைவதை கண்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து சிறுமியின் தந்தை பக்கத்து வீட்டின் இரண்டாம் தளத்தில் உள்ள பூட்டிய வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, சூட்கேஸில் இரத்த வெள்ளத்தில், அரை நிர்வாணமாகக் கிடந்த தனது மகளை தந்தை கண்டு அதிர்ச்சியடைந்தார் .இரத்தம் கசிந்த நிலையில், ஒரு சூட்கேஸில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது நாட்டையே உலுக்கியுள்ளது.இதையடுத்து நடந்த போலீஸ் விசாரணையில் நேற்று இரவு இந்த சம்பவம் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சிறுமி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சிறுமியின் முகத்தில் காயங்களும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான அறிகுறிகளும் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.இக்குற்றத்தை அப்பகுதியைச் சேர்ந்த சில சிறுவர்களே செய்ததாகக் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தலைமறைவாக உள்ள நிலையில், அவர்களைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு டெல்லி, காஜியாபாத், மீரட், அலிகர் ஆகிய இடங்களில் தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.இந்த நிலையில், அந்த பகுதியை சேர்ந்த மக்கள் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை கைது செய்யும்படி கோரிக்கை விடுத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உடனடியாக நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

9 year old girl raped and murdered people protest at midnight seeking justice


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->