22 வயது காமுகனால், 8 வயது சிறுமிக்கு அரங்கேறிய கொடூரம்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தார் மாவட்டத்தில் 8 வயதுடைய சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இதே பகுதியில் 22 வயதுடைய இளைஞர் வசித்து வருகிறார். இந்நிலையில், சம்பவத்தன்று சிறுமியை அழைத்துச் சென்ற 22 வயது இளைஞன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

இதனால் பாதிக்கப்பட்ட சிறுமியிடம், இந்த விஷயத்தை வெளியே கூறினால் கொலை செய்துவிடுவதாக மிரட்டி நிலையில், சிறுமி தனது பெற்றோரிடம் இதுகுறித்து கூறியுள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் இதுகுறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இது குறித்த புகாரை ஏற்ற காவல்துறையினர், சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டு 22 வயது இளைஞரை கைது செய்துள்ளனர். மேலும், சிறுமிக்கு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டது உறுதியாகியுள்ளது. கைதான வாலிபரின் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

8 Year child sexual abuse by 22 year old youngster in Madhya Pradesh


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->