ஜார்கண்ட் || ஆற்றில் தலைகுப்புற பேருந்து கவிழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


ஜார்க்கண்ட் மாநிலத்தில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஆற்றில் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்திலிருந்து சுமார் 50 பயணிகளுடன் ராஞ்சி பகுதியை நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்பொழுது தடிஜாரியா காவல் நிலைய பகுதி அருகே பேருந்து சென்றபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சிவன்னே ஆற்றுப்பாலத்தின் தடுப்பு பகுதியை உடைத்துக் கொண்டு ஆற்றில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 2 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேர் ஹசாரிபாக்கில் உள்ள சதார் மருத்துவமனையில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சிலர் பலத்த காயமடைந்துள்ளதால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

7 people were killed when the bus overturned in the river in tha jharkhand


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->