நிலச்சரிவில் கார் கவிழ்ந்ததில் 7 பேர் உயிரிழப்பு!
7 people died in a car accident due to a landslide
அருணாச்சலப் பிரதேசத்தின் பனா-செப்பா சாலையில் நேற்று இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் கார் பள்ளத்தாக்கில் விழுந்ததில் 7 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.அசாம், சிக்கிம் போன்ற மாநிலங்களில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அசாம், சிக்கிம் அதிக பாதிப்பை சந்தித்துள்ள நிலையில் பலத்த மழையின் மத்தியில் நிலச்சரிவு ஏற்பட்டபோது, பள்ளத்தாக்கில் விழுந்த காரில் இரண்டு குடும்பங்கள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் அருணாச்சலப் பிரதேசத்தின் பனா-செப்பா சாலையில் நேற்று இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் கார் பள்ளத்தாக்கில் விழுந்ததில் 7 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.பலியானவர்களில் 32 வயதான சஞ்சு, அவரது மனைவி தாசும், அவர்களது இரண்டு குழந்தைகள், கச்சுங் மற்றும் நிச்சா , ஒரு கர்ப்பிணித் தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் ஆகியோர் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல அருணாச்சலப் பிரதேசத்தில் நிலச்சரிவுகள் ஏற்பட்ட போது பல பயணிகளை ஏற்றிச் சென்ற ஒரு சுமோ வாகனமும் நிலச்சரிவில் சிக்கிக் கொண்டது. சரிவு ஏற்பட்ட பகுதிக்கு சற்று தள்ளி இருந்ததால் நல்வாய்ப்பாக அந்த அதில் இருந்தவர்கள் உயிர் தப்பினர் என தக்வல்கள் தெரிவிக்கின்றன.
English Summary
7 people died in a car accident due to a landslide