வடலூரில் நெகிழ்ச்சி: தவறவிட்ட மணி பர்ஸை காவல் நிலையத்தில் ஒப்படைத்த இளைஞர்கள்: கௌரவித்த இன்ஸ்பெக்டர்..! - Seithipunal
Seithipunal


வடலூர் அருகே கரைமேடு கிராமத்தை சேர்ந்த உதயநிதி (32) அதே ஊரை சேர்ந்த வசந்தகுமார் (29) ஆகிய இருவரும் நேற்று மாலை தனது சொந்த ஊரிலிருந்து குறிஞ்சிப்பாடி செல்வதற்காக மருவாய் வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

அப்போது மருவாய் பாலம் அருகே வந்த போது சாலையில் மணி பர்ஸ் ஒன்று கிடந்துள்ளது. அதனை எடுத்து அவர்கள் சோதனை செய்த போது அதில் ரூ. 12, 841 பணம் மற்றும் டிரைவிங் லைசன்ஸ், உள்ளிட்டவை இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த இளைஞர்கள் வடலூர் காவல் நிலையத்திற்கு சென்று மணி பர்ஸை உதவி ஆய்வாளர் பரந்தாமனிடம் ஒப்படைத்துள்ளதோடு, அதனை உரிய நபரிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், மணி பா்ஸை விருத்தாச்சலம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் (27) தவறவிட்டமை தெரியவந்துள்ளது. உடனடியாக  காவல் நிலையத்திற்கு அவரை வரவழைத்து காவல் ஆய்வாளா் உதயகுமார் மேல் விசாரணை செய்து உரிய அடையாளம் உண்மை சான்றிதழ் நகல் பெற்ற பின்னா் பர்சை காவல் நிலையத்தில் ஒப்படைத்த்துள்ளனர்.

அத்துடன், இளைஞர்களையும் வரவழைத்து பணத்துடன் பா்சை அவர்களது கையில் கொடுத்து அஜித் குமாரிடம் வழங்க செய்துள்ளனர். அத்துடன் குறித்த, இளைஞர்களின் நேர்மையை பாராட்டும் வகையில் இன்ஸ்பெக்டர் உதயகுமார் பொன்னாடை அணிவித்து ஊக்குவித்து கௌரவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Youths who handed over a lost wallet to the police station in Vadalur


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->