மகாராஷ்டிராவில் கொடூரம்: 15 வயது சிறுமியை கடத்தி கூட்டு பலாத்காரம் - 6 பேர் கைது - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் 15 வயதுடைய சிறுமியை கடத்தி கூட்டு பலாத்காரம் செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த 15 வயதுடைய சிறுமியை சம்பவத்தன்று வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி கடத்திச் சென்றுள்ளார். பின்பு சிறுமியை லாட்ஜில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து அந்த வாலிபருடன் வந்த மேலும் ஐந்து பேரும் சேர்ந்து சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்து, அதனை செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து சிறுமியிடம் வீடியோவை காண்பித்து யாரிடமாவது இது பற்றி கூறினால் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர். மேலும் இந்த வீடியோவை காட்டி பலமுறை சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதையடுத்து சிறுமி அவர்களின் தொல்லை தாங்க முடியாமல் இது குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், சிறுமி தெரிவித்த அடையாளத்தின்படி போக்சோ சட்டத்தின் கீழ் அவுந்த் பகுதியை சேர்ந்த ஓம் ராஜு டிம்போல், ஜெய், அனில் ஜாதவ், சுனில் ஜாதவ், சுபம் மற்றும் கிரண் ஜாவ்லே ஆகிய 6 பேரை கைது செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

6 arrested for kidnapping and gang raping a 15 year old girl in Maharashtra


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->