மகாராஷ்டிரா :: நாசிக்-புனே நெடுஞ்சாலையில் கார் மோதி 5 பெண்கள் பலி, 3 பேர் காயம்.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக்-புனே நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது கார் மோதி 5 பெண்கள் உயிரிழந்தனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள ஷிரோலி புறநகர் பகுதியில் நடைபெற இருந்த திருமணத்தில் கேட்டரிங் வேலைக்காக 17 பெண்கள் சுவார்கோட்டில் இருந்து ஷிரோலிக்கு சென்றனர். அப்பொழுது இரவு 10.45 மணியளவில் திருமண மண்டபத்திற்கு செல்ல இவர்கள் அனைவரும் புனே-நாசிக் நெடுஞ்சாலையை கடந்து செல்ல முயன்றபோது அவ்வழியாக வந்த கார் ஒன்று அவர்கள் மீது வேகமாக மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இரண்டு பெண்கள் உயிரிழந்தனர் மற்றும் மூன்று பெண்கள் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 3 பெண்கள் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற கார் ஓட்டுனர் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

5 woman killed and 3 injured in accident in Nashik pune highway Maharashtra


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->