காஷ்மீர்: பாதுகாப்பு படையினரால் 5 தீவிரவாதிகள் சுட்டு கொலை..! - Seithipunal
Seithipunal


காஷ்மீரில் பாதுக்காப்பு படையினரால் 5 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

காஷ்மீரில் புட்காம் மற்றும் புல்வாமா மாவட்டங்களில்  பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புபடையினருக்கு தகவல் கிடைத்தது.இதனை அடுத்து, அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டனர்.

அப்போது அந்த பகுதியில் பதுங்கியிருந்த  ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் தளபதி ஜாகித் வானி, பாகிஸ்தானை சேர்ந்த ஒரு பயங்கரவாதி உட்பட 5  பேரை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர்.

இது குறித்து காஷ்மீர் ஐஜி விஜய் குமார்  தெரிவிக்கையில், ஜெய்ஷ் இ முகமத் கமாண்டர் பயங்கரவாதி ஜாஹித் வானி முக்கியமானவர் அவர் பாதுகாப்பு படையினரால் சுட்டுகொல்லப்பட்டது பாதுக்காப்பு படையினருக்கு கிடைத்த வெற்றி என தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

5 militants shot dead by security forces


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->