காஷ்மீர்: பாதுகாப்பு படையினரால் 5 தீவிரவாதிகள் சுட்டு கொலை..!
5 militants shot dead by security forces
காஷ்மீரில் பாதுக்காப்பு படையினரால் 5 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
காஷ்மீரில் புட்காம் மற்றும் புல்வாமா மாவட்டங்களில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புபடையினருக்கு தகவல் கிடைத்தது.இதனை அடுத்து, அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டனர்.
அப்போது அந்த பகுதியில் பதுங்கியிருந்த ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் தளபதி ஜாகித் வானி, பாகிஸ்தானை சேர்ந்த ஒரு பயங்கரவாதி உட்பட 5 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர்.
இது குறித்து காஷ்மீர் ஐஜி விஜய் குமார் தெரிவிக்கையில், ஜெய்ஷ் இ முகமத் கமாண்டர் பயங்கரவாதி ஜாஹித் வானி முக்கியமானவர் அவர் பாதுகாப்பு படையினரால் சுட்டுகொல்லப்பட்டது பாதுக்காப்பு படையினருக்கு கிடைத்த வெற்றி என தெரிவித்தார்.
English Summary
5 militants shot dead by security forces