ஜீப்-கார் மோதி பயங்கர விபத்து - 5 பேர் பலி, 9 பேர் படுகாயம்.! உ.பி. முதல்வர் இரங்கல்.! - Seithipunal
Seithipunal


ஆக்ரா-லக்னோ விரைவுச்சாலையில் ஜீப்-கார் மோதிய பயங்கர விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் ராஜஸ்தான் நோக்கி ஜீப்பில் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது ஃபிரோசாபாத் பகுதியில் உள்ள ஆக்ரா-லக்னோ விரைவு சாலை ஓரமாக ஓய்வெடுப்பதற்காக ஜீப் நிறுத்தப்பட்டுள்ளது. அப்பொழுது லக்னோவிலிருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஜீப் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த பயங்கர விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து இந்த விபத்து குறித்த தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர் மற்றும் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு ஷிகோஹாபாத் மற்றும் ஃபிரோசாபாத் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 killed 9 injured Jeep car collision in uttar pradesh


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->