ஜம்மு காஷ்மீர் || 2 வெவ்வேறு என்கவுன்டர்களில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை.!
4 terrorists shot dead in 2 separate encounter in Jammu Kashmir
ஜம்மு காஷ்மீரில் நேற்று பாதுகாப்புப் படையினர் நடத்திய இரண்டு வெவ்வேறு என்கவுன்டர்களில் நான்கு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோரா பகுதியில் நடந்த என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த மூன்று பயங்கரவாதிகளில் லஷ்கர்-இ-தொய்பா கமாண்டர் முக்தர் அகமதுவும் அடங்குவார்.
மேலும் என்கவுண்டர் நடந்த இடத்தில் இருந்து ஒரு ஏகே 47 ரக துப்பாக்கி, ஒரு ஏகே 56 ரக துப்பாக்கி மற்றும் ஒரு கைத்துப்பாக்கி ஆகியவை கைப்பற்றப்பட்டன.
இதையடுத்து அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பிஜ்பெஹாரா பகுதியில் உள்ள செம்தான் கிராமத்தில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மேலும் இரண்டு பகுதிகளில் நடந்த வெவ்வேறு என்கவுண்டர்களில் மொத்தம் நான்கு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
English Summary
4 terrorists shot dead in 2 separate encounter in Jammu Kashmir