நேருக்கு நேர் மோதிய கார் - வேன்.. நொடியில் பறிபோன 4 உயிர்.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம் பகுதி அருகே காரும், சுற்றுலா வேனும் மோதியதில் சிறுவன் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், கிணத்துக்கடவில் உள்ள உறவினரின் இல்ல துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு காரில் வந்துக் கொண்டிருந்தனர். அப்போது மடத்துக்குளம் அருகே நான்குவழிச் சாலையில் காரும், வேனும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த நான்கு பெரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் வேனில் பயணம் செய்த 12 பேர் காயமடைந்துள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தனர்.

அதன் படி போலீசார் விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களின் உடல்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டும் வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

4 peoples died for accident in tirupur


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->