மேற்கு வங்காளம் : பலூனுக்கு காற்றடித்தபோது சிலிண்டர் வெடித்து விபத்து - 4 பேர் பலி, 10 பேர் காயம் - Seithipunal
Seithipunal


மேற்கு வங்காளத்தில் பலூனுக்கு காற்றடித்தபோது கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 10 பேர் காயமடைந்தனர்.

மேற்கு வங்காள மாநிலத்தின் தெற்கு பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ஜாய்நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பாந்த்ரா கிராமத்தில் நேற்று முன்தினம் கண்காட்சி ஒன்று நடைபெற்றது. இந்த கண்காட்சியில் வரிசையாக கடைகள் அமைக்கப்பட்டு, ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர்.

அப்பொழுது இரவு 9.30 மணியளவில் முச்சிராம் ஹால்டர் என்பவரது கடையில் பலூனுக்கு காற்று அடித்த போது எதிர்பாராத விதமாக திடீரென கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பத்து பேர் படுகாயமடைந்தனர்.

இதைத் தொடர்ந்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குதுபுதீன் மிஸ்திரி, ஷாஹீன் மொல்லா, அபிர் காஜி மற்றும் எரிவாயு பலூன் விற்பனையாளர் முச்சிராம் ஹல்டர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்து போலீசார் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

4 killed 10 injured after gas cylinder explodes in West Bengal


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->