#ஆந்திரா || லாரி கவிழ்ந்து கோர விபத்து - 3 தொழிலாளிகள் பலி, 3 பேர் படுகாயம் - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் கால்வாயில் லாரி கவிழ்ந்த விபத்தில் மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் உள்ள மாச்சர்லாவில் இருந்து கட்டுமான பணிக்கு கற்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று ரேப்பள்ளி நோக்கி சென்று கொண்டு இருந்தது. இந்த லாரியின் பின்புறத்தில் தொழிலாளர்கள் அமர்ந்து சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் ரவி அனந்தபுரம் பகுதியில் சென்ற போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் லாரியின் பின்புறம் அமர்ந்து சென்ற தொழிலாளர்கள் மீது கட்டுமான கற்கள் விழுந்ததில் 3 பேர் கற்களுக்கு அடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் ஓட்டுநர் உட்பட 3 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்தில் உயிரிழந்தவர்கள் சிந்தர்லா பாசர்ல பாடு பகுதியை சேர்ந்த சென்ன கேசவல்லு(48), சாம்பைய்யா (60), வாலி (41) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 workers killed in lorry accident in Andhra


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->