ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சூடு.! 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை.! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் உள்ள நவ்காம் பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர், நேற்று மாலை முதல் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அப்பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினரை குறி வைத்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதையடுத்து பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் தீவிரவாதிகள் 2 பேரை சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து, சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடமிருந்த வெடி மருந்துகள் மற்றும் ஆயுதங்களை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அப்பகுதியில், தீவிரவாதிகளின் நடமாட்டம் குறித்து பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 terrorist killed shooting in Jammu Kashmir


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->