கர்நாடகா: லாரி மீது கார் மோதி விபத்து - 2 பேர் பலி, 3 பேர் படுகாயம் - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் லாரி மீது கார் மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர் மற்றும் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் குத்துலு படாவனே பகுதியை சேர்ந்தவர் சதாம் செரீப்(23). இவர் தனது நண்பர்கள் 4 பேருடன் காரில் பெங்களூருக்கு சென்றார். பின்பு அங்கிருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தபோது மாத்தூர் அருகே, முன்னாள் சென்ற லாரியை கார் முந்திச் செல்ல முயன்றுள்ளது. அப்பொழுது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் லாரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில் காரில் சென்ற ஐந்து பேரும் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் காயமடைந்த ஐந்து பேரையும் விட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சதாம் செரீப் மற்றும் அவரது நண்பர் காசீப்(25) ஆகிய இரண்டு பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மற்ற மூன்று பேர்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்த இரண்டு பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 killed and 3 injured in lorry car accident in Karnataka


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->