உ.பி-யில் கொடூரம்: சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் - 2 பேர் கைது - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேசம் மாநிலத்தில் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

உத்திரபிரதேசம் மாநிலம் மௌ மாவட்டத்தின் காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை சகோதரர்களான இருவர் கடத்திச் சென்றுள்ளனர். மேலும் தங்களது ஆசைக்கு இணங்காவிட்டால், மாந்திரீகத்தின் மூலம் சிறுமிக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் தீங்கு விளைவிப்பதாக மிரட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து போலீசார், சிறுமியை கடத்திச்சென்று, மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த இரண்டு பேரையும் கைது செய்தனர். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் அவளை ஒரு மாயையில் வைத்து சரணடையும்படி மிரட்டியும், குடும்பத்திற்கு தீங்கு விளைவிக்கும் பயத்தைக் காட்டி பலாத்காரம் செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பின்பு இருவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 arrested for kidnapping raping a girl in uttar pradesh


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->