நெரிசலில் 11 பேர் பலி: வரும் 10-ம் தேதி வழக்கு ஒத்திவைப்பு...! - உயர் நீதிமன்றம்
11 people killed in stampede Case adjourned 10th High Court
IPL கோப்பையை முதல் முறையாக RCB அணி வென்றது.இது 18 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் கோப்பை கிடைத்த மகிழ்ச்சியில் RCB ரசிகர்கள் சின்னசாமி திடலில் குவிந்தார்கள்.

அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்தநிலையில்,பெங்களூரு RCB வெற்றிக் கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரம் குறித்து அம்மாநில உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது.
அச்சமயம் விசாரணை நடத்த தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும், நீதி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் மாநில அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில் விதான் சவுதா மற்றும் சின்னச்சாமி மைதானம் என ஒரே நேரத்தில் இரு நிகழ்ச்சிகளை நடத்தியது ஏன்? அரசு சார்பில் செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன?" ஆகிய கேள்விகளுக்கு விரிவான பதிலளிக்க அரசுக்கு உத்தரவிட்டு வரும் 10ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
English Summary
11 people killed in stampede Case adjourned 10th High Court