பீகாரில் கோர விபத்து: ஆட்டோ ரிக்-ஷா மீது கனரக வாகனம் மோதியதில், 08 பேர் பலி; 05 பேர் படுகாயம்..! - Seithipunal
Seithipunal


பீஹார் மாநிலம், டானியாவன் தொகுதிக்கு உட்பட்ட ஷாஜகான்பூர் காவல் நிலையப் பகுதியில் உள்ள டானியாவன்-ஹில்சா சாலையில் இன்று காலை பயங்கர சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. ஆட்டோ மீது கனரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் 08 பேர் பலியாகியுள்ளனர். இந்த துயர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

குறித்த கோரா விபத்தில் பலியான அனைவரும் நாளந்தா மாவட்டத்தில் உள்ள ஹில்சா காவல் நிலையத்திற்கு உட்பட்ட ரெட்டி மலாமா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்று மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இவர்கள் இன்று திரிவேணி சங்கத்தில் உள்ள கங்கையில் புனித நீராடுவதற்காக பதுஹாவுக்குச் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று காலை 06.45 மணியளவில் ஆட்டோ ரிக்ஷாவும் கனரக வாகனமும் (ஹைவா) நேருக்கு நேர் மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் 08 பேர் உயிரிழந்ததோடு, மேலும் காயமடைந்த காயமடைந்த 05 பேர் சிகிச்சைக்காக பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்ததோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க ஏற்பாடு நடைபெறுகிறதாக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கூறியுள்ளனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

08 killed in auto rickshaw collision in Bihar


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->