ஆந்திராவில் விபரீதம்; கோதாவரி ஆற்றில் மூழ்கி 06 பேர் பலி: 02 பேர் மாயம்..! - Seithipunal
Seithipunal


ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் மூழ்கி 06 பேர் பலியாகியுள்ளதோடு, 02 பேர் மாயமாகியுள்ளனர், அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  

ஆந்திர பிரதேசம் கோனசீமா மாவட்டத்தில் செரிலங்கா என்ற கிராமத்தில் விழா ஒன்றில் கலந்து கொள்ள காக்கி நாடா, மண்டபேட்டா பகுதிகளில் இருந்து சிலர் வந்திருந்துள்ளனர். விழா முடிந்த பின்னர், அவர்கள் கிராமத்தின் அருகில் உள்ள கோதாவரி ஆற்றுக்கு சென்றிருந்துள்ளனர். அங்கு அவர்கள் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஆற்றில் மூழ்கி 06 பேர் பலியாகியுள்ளனர். மேலும் இருவர் காணாமல் போயுள்ளனர்.

இதுகுறித்து ஊர்மக்கள் போலீஸ் மற்றும் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், நீரில் மூழ்கி பலியான 06 பேரின் சடலங்களை மீட்ட்டுள்ளனர். அத்துடன், காணாமல் போன 02 பேரை மாநில பேரிடர் மீட்பு படை, உள்ளூர் நீச்சல் வீரர்கள் உதவியுடன் தேடி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

06 people died and 02 people went missing after drowning in Godavari river in Andhra Pradesh


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->