இடிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ.8000 நிவாரணத் தொகை! ரூ.4000 மதிப்பிலான அத்தியாவசியப் பொருட்கள் - தமிழக அரசு அதிரடி!
Delhi cm demolish tamil people home Relief fund announce CM Stalin
தெற்கு டெல்லியின் கல்காஜி விரிவாக்க பகுதியிலுள்ள பூமிஹீன் முகாமை மூன்று நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும் என டெல்லி மேம்பாட்டு ஆணையம் (DDA) அறிவித்தது.
ஜூன் 8 முதல் 10 வரை கால அவகாசம் வழங்கப்பட்டு, காலி செய்யாவிட்டால் உள்ளே உள்ள பொருட்களுக்கு அரசு பொறுப்பேற்காது என்றும், திட்டமிட்டபடி இடிப்பு நடவடிக்கைகள் நடக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டது.
இதன் பின்னர், அரசின் நடவடிக்கையை எதிர்த்து குடியிருப்பாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டாலும், இன்று புல்டோசர்கள் மூலம் குடியிருப்புகள் இடிக்கப்பட்டன. குஹி-ஹொப்ரி பகுதியில் அரசு நிலத்தில் கட்டப்பட்ட சுமார் 300 வீடுகள் அகற்றப்பட்டன.
இதனால், டெல்லி மதராசி கேம்பில் வசித்த 370 தமிழர் குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. இவர்களின் வாழ்வாதாரத்தை சீராக்கும் வகையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கினார். தலா ரூ.8000 நிவாரணத் தொகை அவர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது. மேலும், தலா ரூ.4000 மதிப்பிலான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய தொகுப்பும் வழங்க தீர்மானிக்கப்பட்டது.
முதற்கட்டமாக, 150 குடும்பங்களுக்கு அமைச்சர் ஆவடி நாசர் அத்தொகுப்புகளை வழங்கினார்.
English Summary
Delhi cm demolish tamil people home Relief fund announce CM Stalin