ஐய்யயோ! அச்சுறுத்தும் இருவகையான கொரோனா தொற்று...! சீனாவை தாண்டி இந்தியாவிலும் கண்டுபிடிப்பு...! - Seithipunal
Seithipunal


நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, உலகையே அச்சுறுத்திய ''கொரோனா தொற்று'' மீண்டும் பல நாடுகளை மிரட்டி வருகிறது. இதில் சீனா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் பாதிப்பு அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக 2 வகை கொரோனா மாறுபாடு வைரஸ்கள் இருப்பதாக 'உலக சுகாதார நிறுவனம்' அடையாளம் கண்டுள்ளது.அவ்வகையில் என்பி.1.8.1 மற்றும் எல்எப்.7 ஆகிய 2 கொரோனா திரிபு வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வகை வைரஸ்களால், இந்த சீனா மற்றும் ஆசியாவின் சில  பகுதிகளில் தொற்று வேகமாக பரவி வருவது தெரியவந்துள்ளது.இந்த 2 வகை கொரோனாவும் இந்தியாவிலும் கண்டறியப்பட்டு இருக்கிறது.

அதன்படி என்பி.1.8.1. வைரஸ் கடந்த மாதம் தமிழ்நாட்டில் ஒருவருக்கும், எல்எப்.7 வகை வைரஸ் குஜராத்தில் 4 பேருக்கும் தொற்றியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த மாறுபாடுகள் கண்காணிப்பின் கீழ்தான் இருப்பதாகவும், அவை அபாயமானவையாக இதுவரை வரையறுக்கப்படவில்லை என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Two types of threatening corona infection Discovered in India beyond China


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->