நலன் தரும் முத்திரை., இந்த முத்திரை செய்தால் மூளை சக்தி அதிகரிக்கும்..!!
TSE Mudra For Health care
மூளையின் சக்தியை அதிகரிக்க சி முத்திரை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
சிலருக்கு கவலை, பயம், சோகம், துரதிருஷ்டம், தோஷங்கள், மகிழ்ச்சியின்மை ஆகியவை ஏற்படும் அப்போது சி முத்திரை செய்வது கவலைகள் நீங்கி மகிழ்ச்சியாக வைத்து கொள்ள உதவும். இந்த முத்திரையை எப்படி செய்வது என பார்போம்.
முதலில் அமர்ந்து கொண்டு இரண்டு கைகளையும் இரண்டு தொடைகளின் மீது வைத்துக்கொள்ளவேண்டும். பெருவிரலை சிறுவிரலின் அடிப்பகுதியில் வைக்க வேண்டும். பெருவிரலைஸ் சுற்றி மற்ற நான்கு விரல்களால் மூடவேண்டும்.
மூக்கின் வழியாக சுவாசத்தை உள்ளிழுக்க வேண்டும். இப்போது "ஓம்" என்ற பிரணவ மந்திரத்தை 7 முறை சொல்லவேண்டும். அந்த ஒலி வலது காதில் ஒலிக்கும்போது தலைப்பகுதியை அடையும். இப்பொழுது உள்ளிழுத்த காற்றை மெல்ல வெளியே விடவேண்டும். காற்றை வெளியே விடும்போது கைகளை விரிக்கவேண்டும்.
இந்த முத்திரையை நாம் குறைந்தது 7 முறை சொல்ல வேண்டும். மேலும் ீந்த முத்திரை செய்வதால் உடலுக்கும் மனதிற்கும் ஒரு காந்த சக்தியையும் ஒரு வசீகரத்தையும் கொடுக்கும். மூளையின் சக்தி அதிகரிக்கும். மகிழ்ச்சியான உள்ளுணர்வு அதிகரிக்கும்.
English Summary
TSE Mudra For Health care