கலெக்டர் அலுவலகத்தில் செவிலியர்கள்!! ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பெரம்பலூர் அருகே, பரபரப்பு!!
nurses strike in collector office
நேற்று, திருச்சி அருகே, பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு, பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் தங்களது கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
இந்த செவிலியர்களின் போராட்டத்திற்கு, மாவட்ட செவிலியர் சங்கத்தின் தலைவர் மற்றும் துணை தலைவர் தலைமை தாங்கினர். செவிலியர்கள் உடுப்பிலேயே செய்யப்பட்ட இந்த போராட்டத்தில், 'இடமாறுதல் ஆணை பெற்ற 8 மாதங்களாகியும் விடுவிக்கப்படாத செவிலியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பது குறித்து செயலாளர் சங்கத்தின் கோரிக்கைகளை குறித்து விளக்கவுரையாற்றினர்.
மேலும், நீதிமன்ற உத்தரவின்படி செவிலியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சங்க மாநில நிர்வாகிகள் மீதான நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். அனைவருக்கும் ஏற்புடைய ஒரே மாதிரியான சீருடை அரசு வழங்க வேண்டும்.' என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் கலந்து கொண்ட செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
English Summary
nurses strike in collector office