கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை! தமிழக அரசு தகவல்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் யாரும் உயிரிழக்கவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு தமிழகத்தில் ஏற்பட்டது முதல் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் விவரங்கள், அதனால் உயிரிழந்தவர்கள் விவரங்கள், குணமடைந்தவர்கள் விவரங்கள் என பல்வேறு விவரங்களை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது. 

தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ஆம் தேதிக்கு பிறகு தொடர்ந்து தினமும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்த நிலையில் இன்று யாரும் உயிரிழக்கவில்லை என சுகாதார துறை தெரிவித்துள்ளது.

இன்று 112 பேர் கொரோனா தொற்றால் பதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளதாகவும், 327 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாகவும், சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆயிரத்து 461 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

No covid death day


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->